சங்கரன்கோவிலுக்கு இன்று நிர்மலா சீதாராமன், அண்ணாமலை வருகை

சங்கரன்கோவிலுக்கு இன்று நிர்மலா சீதாராமன், அண்ணாமலை வருகை

 சங்கரன்கோவிலில் இன்று நடக்கும் பாஜ., பொதுக்கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சங்கரன்கோவிலில் இன்று நடக்கும் பாஜ., பொதுக்கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சங்கரன்கோவிலுக்கு இன்று நிர்மலா சீதாராமன், அண்ணாமலை வருகை தென்காசி மாவட்ட பாஜக தலைவர் கே. ஏ. ராஜேஷ் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, தென்காசி மாவட்ட பாஜக சார்பில் சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில் இன்று வெள்ளிக்கிழமை (பிப். 23) பாஜக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் கே ஏ ராஜேஷ் ராஜா தலைமை தாங்குகிறார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், அருள் செல்வன், ராமநாதன், பொருளாளர் பால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலர் பொன். வி. பால கணபதி, தென்காசி மாவட்ட பாஜக மாவட்டப் பார்வையாளர் மகாராஜன், விருதுநகர் மாவட்டத் தலைவர் சி. சரவணதுரை, நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் அ. ஆனந் தன், இணை அமைப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசுகின்றனர்.

சங்கரன்கோவில் நகரத் தலைவர் எஸ். கணேசன் வரவேற்கிறார். மாவட்டச் செயலர் வி. சுப்பிரமணி யன் நன்றி கூறுகிறார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பாஜக வின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகள், தொண்டர் கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் கே. ராஜேஷ் ராஜா அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story