நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: நெல்லை மாநகராட்சி ஆணையாளர்

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: நெல்லை மாநகராட்சி ஆணையாளர்

மாநகராட்சி ஆணையாளர் 

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்து விட்டடதாக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நேற்று 11 மணி அளவில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் இந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி ஆணையாளருமான சுபம் ஞானதேவ்ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின் பொழுது மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story