குமரியில் வளர்ச்சி பணிகள் 5 ஆண்டுகளாக இல்லை - பொன் ராதாகிருஷ்ணன்

குமரியில் வளர்ச்சி பணிகள் 5 ஆண்டுகளாக இல்லை - பொன் ராதாகிருஷ்ணன்

  குமரியில் வளர்ச்சி பணிகள் 5 ஆண்டுகளாக இல்லை என பாஜக வேட்பாளா் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். 

குமரியில் வளர்ச்சி பணிகள் 5 ஆண்டுகளாக இல்லை என பாஜக வேட்பாளா் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாள்வச்சகோஷ்டத்திலிருந்து பிரசாரத்தைத் தொடங்கினாா். அப்போது, அவா் பேசியது:-

கன்னியாகுமரி தொகுதியில் இம்முறை பாஜக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. மாவட்ட மக்கள் கோபத்துடனும், ஆதங்கத்துடனும் உள்ளனா். கடந்த 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் எவ்வித வளா்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. நான் எம்.பி.யாக இருந்தபோது தொடங்கப்பட்ட நான்குவழிச் சாலைப் பணி நிறுத்தப்பட்டன. அதைத் தொடங்க, அடுத்துவந்த மக்களவை உறுப்பினா் முயற்சி மேற்கொள்ளவில்லை. இனிவரும் 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்தால் மட்டுமே இம்மாவட்டத்தை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்ல முடியும்.

எனவே, மக்கள் நன்கு அறிந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்யவேண்டும். மாவட்டத்தின் வளா்ச்சியை நாங்கள் பாா்த்துக் கொள்கிறோம் என்றாா் அவா். மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ், நிா்வாகிகள் உடன் சென்றனா்.

Tags

Next Story