வேண்டாம் மோடி, வேண்டாம் மோடி - மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம்

வேண்டாம் மோடி, வேண்டாம் மோடி -  மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம்

மீண்டும் மோடி, மீண்டும் மோடி என அண்ணாமலை பேசுகின்றார்; நாங்கள் வேண்டாம் மோடி, வேண்டாம் மோடி என்கிறோம் என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கூறினார். 

மீண்டும் மோடி, மீண்டும் மோடி என அண்ணாமலை பேசுகின்றார்; நாங்கள் வேண்டாம் மோடி, வேண்டாம் மோடி என்கிறோம் என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கூறினார்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் அறிமுக கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி.சண்முகம் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய பொன்முடி நீதிமன்ற தீர்ப்பால் மீண்டும் அமைச்சராகியுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சின்னம் பொறிக்கப்பட்ட காரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை செல்கிறார் இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும், காவல் துறையும் வேடிக்கை பார்ப்பதாகவும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளதாக தெரிவித்தார். திமுக அமைச்சர்கள் எல்லாம் தங்கள் மீதான வழக்குகள் குறித்து தான் பேசிக் கொள்கிறார்கள்,

தங்கள் துறையின் திட்டங்கள் குறித்தும், மக்கள் நலன் குறித்து பேசுவதில்லை, திமுகவுக்கு அளிக்கும் வாக்கு, பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு என்றும் மாநிலத்தைப் பற்றி கவலைப்படாத திமுக அரசு, மக்களை பற்றி கவலைப்படாத பாஜக அரசு மதத்தின் பெயரால் இன்றைக்கு நாட்டில் பிரிவினை வாதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் அரசு பாஜக உள்ளதாக தெரிவித்தார். இன்றைக்கு நாடு ஒரு அபாயகரமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என அண்ணாமலை சொல்கிறார், நாங்கள் சொல்கிறோம் வேண்டாம் மோடி, வேண்டாம் மோடி என்றும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு தனிமனித சுதந்திரத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என கூறினார். பாஜகவை யாராவது எதிர்த்தால், வருமான வரித்துறை, அமலாக்குத்துறை, மத்திய புலனாய்வுத்துறை வரும். இந்த மூன்றும் தான் பாஜகவின் கூட்டணி கட்சிகள் பாஜகவில் இருப்பவள் எல்லாம் உத்தமரா காந்தியா தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பிற்கே வராத பாஜக, அதிமுக போட்ட பிச்சையால் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது என தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியில் ஒரு திட்டம் கூட தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் புயல், வெள்ள வரும்போது வராத பிரதமர், தேர்தல் வந்தால் மட்டும் வருகிறார். பிரதமர் காரில் வருவார், ரயிலில் வருவார், பேருந்தில் வருவார், கப்பலில் வருவார், சாலையில் வருவார் அப்போதும் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட நிதி கொடுக்க மாட்டார். காவிரியில் தண்ணீரில் திறக்க நடவடிக்கை எடுக்க மாட்டார். மேகதாது அணை கட்டக்கூடாது என நாம் போராடினால் மத்தியில் உள்ள நீர் வளத்துறை அமைச்சர் அனுமதி கொடுப்பது குறித்து பரிசீலிப்போம் என கூறுகிறார். தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ் தொன்மையான மொழி. தமிழ் பிடித்த மொழி. திருக்குறள் எனக்கு பிடித்த நூல் என கூறுகிறார். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தோம் ஆனால் அறிவிக்கவில்லை.

மக்களை ஏமாற்றுவதற்காக தான் இப்படி பேசுகிறார் மோடி. தமிழகத்திற்கு வந்தால் தமிழ் ஆந்திராவிற்கு சென்றால் தெலுங்கு கர்நாடகாவிற்கு போனால் கன்னடம். கேரளத்திற்கு சென்றால் மலையாளம் ஆனால் எல்லோருக்கும் மோடி அல்வாதான் தருவதாக தெரிவித்தார். சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசிய உதயநிதி வாய்திறக்காமல் அமைதியாக உள்ளதாகவும் வாயாலையே வளர்ந்த கட்சி வாயாலையே அழிய போவதாகவும் திமுக அனைகின்ற விளக்கு பிரகாசமாக தான் எரியும் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story