மதியம் 12 - 3 வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம் - ஆட்சியர்

மதியம் 12 - 3 வரை  யாரும் வெளியில் செல்ல வேண்டாம் - ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இன்று மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட .ஆட்சியர் பிரதீப்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று (23.4.2024) வெளிட்டுள்ள அறிவிக்கையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களில் (23.4.2024) மற்றும் (24.4.2024) ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story