செய்யாற்று படுகையில் இரவு நேர மணல் திருட்டு

செய்யாற்று படுகையில் இரவு நேர மணல் திருட்டு

பைல் படம் 

செய்யாற்று படுகையில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஒதலவாடி கிராமத்தின் அருகேயுள்ள செய்யாற்றுப் படுகையில் ஒதலவாடி பகுதிகளைச் சேர்ந்த சிலர் மாட்டு வண்டிகள் மூலம் இரவு நேரங்களில் ஆற்று மணலை திருட்டுத்தனமாக அள்ளிச் செல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் மாட்டு வண்டியில் மணலை திருடிச் சென்றனர்.இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து சேத்துப்பட்டு வட்டாட்சியர் சசிகலாவுக்கும், சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story