நடவடிக்கை இல்லாத துணை மேயர் வார்டு

நடவடிக்கை இல்லாத துணை மேயர் வார்டு

தேங்கி நிற்கும் மழை நீர் 

நெல்லை மாநகராட்சி துணை மேயரின் வார்டு பகுதியான சிதம்பரம் நகரில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு பெய்த தொடர் மழையினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில் தச்சநல்லூர் மண்டலம் 1வது வார்டுக்கு உட்பட்ட சிதம்பரம் நகர் பகுதியில் கடந்த ஏழு நாட்கள் ஆகியும் மழைநீர் தேங்கி இதுவரை அதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்த வார்டு துணை மேயர் ராஜு வார்டு என்பது குறிப்பிடத்தக்கது.



Tags

Next Story