தாரமங்கலத்தில் வடமாநில பெண் மாயம்

தாரமங்கலத்தில் வடமாநில பெண் மாயம்

தாரமங்கலத்தில் வடமாநில பெண் மாயமான சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தாரமங்கலத்தில் வடமாநில பெண் மாயமான சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சுமீர்பாண்டே (வயது 39). இவருடைய மனைவி சாந்திதேவி (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக தாரமங்கலம் அருகே கருக்கல்வாடி கங்காணியூர் பகுதியில் தங்கி டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக சாந்திதேவி தனது செல்போனில் வேறு ஒருவருடன் அடிக்கடி பேசி வந்ததை சுமிர்பாண்டே கண்டித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சாந்திதேவி வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து சுமீர்பாண்டே கொடுத்த புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story