இடி தாக்கி வட மாநில தொழிலாளி உயிரிழப்பு.

இடி தாக்கி வட மாநில தொழிலாளி உயிரிழப்பு.

போலீசார் விசாரணை 

தமிழகத்தில் நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே செம்மனாரை ஆதிவாசி கிராமத்தில் கட்டுமான பணிபுரியும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புரோ செஞ்சிட்ராய் (20) இரவு 7 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே வந்த போது திடீரென இடி தாக்கியுள்ளது. உடனே உடனிருந்த தொழிலாளர்கள் செஞ்சிட்ராயை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செஞ்சிட்ராய் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து வடமாநில தொழிலாளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் நேற்று முழுவதும் பெய்த மழை காரணமாக அதிகபட்சமாக குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி கிராமத்தில் 10.8 சென்டிமீட்டர் மழையும் குன்னூர், சுற்றுப்பகுதிகளில் 6 செமீ, மழை பதிவாகியுள்ளது ...

Tags

Next Story