பணம் வைத்து சூதாடியதில் பணம் இழப்பு வட மாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை !

பணம் வைத்து சூதாடியதில் பணம் இழப்பு வட மாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை !

 தற்கொலை

வீரராக்கியம் - பணம் வைத்து சூதாடியதில் பணம் இழப்பு, விரக்தியில் வட மாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

வீரராக்கியம்-பணம் வைத்து சூதாடியதில் பணம் இழப்பு, விரக்தியில் வட மாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ராஜாத் மோண்டால். வயது 24. இவர், கரூர் மாவட்டம், மாயனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ,வீரராக்கியம் பகுதியில் செயல்படும் வி கே எ பாலிமர்ஸ் நிறுவனத்தில் டைலர் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கு பணம் வைத்து சூதாடும் பழக்கம் தீவிரமாக இருந்து வந்துள்ளது.

பலமுறை நண்பர்களுடன் சூதாடி பணத்தை இழந்துள்ளார். பணத்தை இழந்ததால் மனவிரக்தி அடைந்த ராஜாத் மோண்டால், ஜூன் 7ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில், வீரராக்கியம் பகுதியில் உள்ள சுவாதி திருமண மண்டபம் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அறிந்த இவருடன் பணியாற்றிய இவரது உறவினர் கொளர்காரி மோண்டால் என்பவர், இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ராஜாத் மோண்டால் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags

Next Story