வடமாநில வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வடமாநில வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
தற்கொலை 
கன்னியாகுமரி மாவட்டம், தாமரைகுட்டிவிளை பகுதியில் வடமாநில தொழிலாளி பலியானன சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பகினராஜ் ( 49). இவர் குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தாமரைகுட்டி விளையில் இருக்கும் கயிறு தயாரிப்பு தொழில் கூடத்தில் பணி செய்து வருகிறார். சம்பவ தினம் காலை 9 மணி அளவில் இவர் திடீரென அங்கு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்குள்ளவர்கள் அவரை கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த போது பகினராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

உடனடியாக இது குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று விசாரணை நடத்தி, பகீனராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது வெப்ப அளவு அதிகமாக உள்ளது. எனவே ஹீட் ஸ்டாக் ஏற்பட்டு பகினராஜ் இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் இருக்குமா என்பது பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும் என்று போலீசார் கூறினார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story