வடகிழக்கு பருவமழை: கண்காணிப்புக் குழுக் கூட்டம்

வடகிழக்கு பருவமழை:  கண்காணிப்புக் குழுக் கூட்டம்

கண்காணிப்புக் குழுக் கூட்டம்


கூட்டம்

தேனி மாவட்டம், வைகை அணைப்பகுதியில் உள்ள வைகை இல்லத்தில், வடகிழக்கு பருவமழை 2023 தொடர்பான கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா முன்னிலையில் நடைபெற்றது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்து மாவட்டங்களுக்கு கண்காணிப்புக்குழு அலுவலர்களை நியமித்து, மாவட்டங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க வேண்டும் என்றும். பொதுமக்களுக்கு தேவையான நேரத்தில் உரிய வசதிகளை செய்து தருதல் மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், உட்கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து,

தேனி மாவட்டத்தில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை. பள்ளி கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறை. சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Tags

Next Story