பெரம்பலூரில் வடமாநில வாலிபர் உயிரிழப்பு

பெரம்பலூரில் வடமாநில வாலிபர் உயிரிழந்தார்.

டெல்லி, டோலி விகார்சங்கம், சுரேஷ்சந்திரகுப்தா மகன் ஆசிஷ் குப்தா டைல்ஸ் மற்றும் கிரானைட் ஒட்டும் தொழில் செய்து வரும் இவர் பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் வேலை செய்து வந்துள்ளார், இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஆசிஸ்குப்தா மற்றும் உடன் பணியில் இருப்பவர்கள் என ஆறு பேர் ஒரே அறையில் தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு மாலை வீட்டிற்க்கு வந்தவர் சாப்பிட்டுவிட்டு அமர்ந்திருந்தவர் திடீரென்று மயக்கம் அடைந்துள்ளார். மயக்கம் அடைந்த நபரை, உடன் இருந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர் கூறியுள்ளனர்.

மேலும் இறந்தவரின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனை பிணவரையில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் ஆசிஷ் குப்தா உயிரிழந்தது குறித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story