காஞ்சிபுரத்தில் ஐந்தாவது இடம் பிடித்த நோட்டா !

காஞ்சிபுரத்தில் ஐந்தாவது இடம் பிடித்த நோட்டா !

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காஞ்சிபுரத்தில் சுயேட்சை வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிய நோட்டா ஐந்தாவது இடத்தை பிடித்தது.  

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காஞ்சிபுரத்தில் சுயேட்சை வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிய நோட்டா ஐந்தாவது இடத்தை பிடித்தது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கு முன்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு மற்றும் வேட்பு மனு வாபஸ் பெறுதல் என பல்வேறு நிகழ்வுகளுக்கு பின் இறுதியாக திமுக , அதிமுக , பாமக நாம் தமிழர், கட்சி பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் எட்டு சுயேச்சை உறுப்பினர்கள் என மொத்தம் 11 நபர்கள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் இறுதி கட்டத்தில் போட்டியிட்டனர்.

இந்நிலையில் வாக்குப்பதிவு எண்ணிக்கை துவங்கி ஒவ்வொரு சுற்றுகளாக 32 சுற்றுகள் வரை நடைபெற்றது. இறுதியில் திமுக வேட்பாளர் செல்வம் ஐந்து லட்சத்து 86 ஆயிரத்து 044 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 3 லட்சத்து 64 ஆயிரத்து 571 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமார் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 272 வாக்குகளும், பாமக வேட்பாளர் ஜோதி ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 931 வாக்குகளும் பெற்றனர். இந்த நான்கு வேட்பாளர்களைத் தவிர ஐந்தாவது ஆக ஐந்து இலக்கத்தில் வாக்குகள் பெற்றது நோட்டா வாகும். இந்தத் தேர்தலில் நோட்டாவிற்கு 16,965 வாக்குகள் கிடைத்துள்ளது.

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் 45068 வாக்குகளும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் 2737 வாக்குகளும் செய்யூர் சட்டமன்ற தொகுதியில் 139 வாக்குகளும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 1476 வாக்குகளும் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 2290 வாக்குகளும் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 440 வாக்குகளும் தபால் வாக்குகளில் 154 வாக்குகளும் என மொத்தம் 16,965 வாக்குகள் பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஐந்து சுயேட்சை வேட்பாளர்கள் என அனைவரும் சேர்ந்து மொத்தம் 16 ஆயிரத்து 795 வாக்குகள் மட்டுமே எடுத்தனர். இவர்களை அனைவரையும் காட்டிலும் நோட்டா கூடுதலாக 170 ஓட்டுகள் எடுத்துள்ளது. இதேபோல் தபால் வாக்குகள் செலுத்தியதில் 1101 வாக்குகள் செல்லாதவைகளாக உள்ளது.

Tags

Next Story