பல்லடத்தில் விதிகளை மீறி இயக்கிய தார் பிளாண்டுக்கு நோட்டீஸ்

பல்லடத்தில் விதிகளை மீறி இயக்கிய தார் பிளாண்டுக்கு நோட்டீஸ்

நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிறுவனம்

பல்லடத்தில் விதிகளை மீறி இயக்கியதாக தார்பிளாண்டுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

பல்லடத்தில் விதிகளை மீறி பல்லடம் அருகே கோடங்கிபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தார் பிளான்ட் செயல்பட்டு வந்தது. இந்த பிளான்ட் மீது விவசாயி மற்றும் பொதுமக்கள் திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு புகார் அளித்தனர்.

அந்த மனுவில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் தனியார் பள்ளி உள்ளிட்டவற்றுக்கு மிக அருகில் தார் பிளான்ட் செயல்படுவதாகவும், சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வருவதாகவும், எனவே அந்த தார் பிளாண்ட் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. புகாரையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விளக்கம் கேட்டு அந்த தார்பிளான்ட் நிறுவனத்திற்கு நோட்டீசு அனுப்பினர்.

இதை தொடர்ந்து தற்காலிகமாக தார்பிளான்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story