மார்ச் மாத மின் குறைதீர்க்கும் முகாம் தேதி அறிவிப்பு

மார்ச் மாத மின் குறைதீர்க்கும் முகாம் தேதி அறிவிப்பு

குறைத்தீர் கூட்டம்

திருநெல்வேலியில் மின் நுகர்வோர் குறைத்தீர்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மாதம்தோறும் மின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் மார்ச் மாதத்திற்கான குறைதீர்க்கும் முகாம் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (மார்ச் 1)வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும்,மார்ச் 5இல் கல்லிடைக்குறிச்சியிலும், 8-இல் திருநெல்வேலியிலும் (கிராமப்புறம்),19ல் திருநெல்வேலி நகர்புறத்திலும் நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story