சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு

சமயபுரம் மாரியம்மன் கோவில்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத அமாவாசை நாளை 10 ந்தேதி புதன்கிழமை இரவு 8.05 மணி முதல் மறுநாள் மாலை 6.31 மணி வரை அமாவாசை தரிசனம் செய்யலாம் என கோயில் இணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஸ்தலமாகும். அம்மனை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பௌர்ணமி அமாவாசை போன்ற தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். மேலும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் இரவில் கோயில் வளாகத்தில் தங்கி அதிகாலையில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்நிலையில் மார்கழி மாத அமாவாசை வருகின்ற 10 ந்தேதி புதன்கிழமை இரவு 8.05 மணிக்கு தொடங்கி மறுநாள் 11 ந்தேதி வியாழக்கிழமை மாலை 6.31 மணிக்கு முடிகிறது. எனவே இந்த நேரத்தில் பக்தர்கள் அமாவாசை தரிசனம் செய்யலாம் என கோயில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story