கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நவம்பர் 1-ல் உள்ளூர் விடுமுறை.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு  நவம்பர் 1-ல் உள்ளூர் விடுமுறை.

திருவள்ளுவர் சிலை 

கன்னியாகுமரி தினத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாள் நவம்பர் 1 ஆகும். இதனைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை கன்னியாகுமரி தினம் என கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் குமரி மாவட்டம் தோன்ற முதல் காரணமாக இருந்த தியாகி மார்ஷல் நேசமணியை அப்பகுதி மக்கள் குமரி தந்தை என அழைக்கின்றனர். எனவே, இந்த தினத்தை நினைவுப்படுத்தும் வகையில், நவம்பர் 1-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags

Next Story