ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி பரப்புரை

ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆதரித்து மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் பரப்புரை செய்தார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீசன் ஆதரித்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணிக்கூண்டு அருகில் தேர்தல் பரப்பரை நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு பரப்புரையாற்றினார் அப்போது 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து இதே தொகுதியில் இருந்து நாம் அனுப்பி இருக்கிறோம் அவர்கள் போய் மக்களுக்காக பேசுவார்கள் மக்கள் உரிமைக்காக பேசுவார்கள் நாட்டினுடைய நலனுக்காக பேசுவார்கள் என நினைத்தோம் ஆனால் இவர்களுக்கு பதில் 17 எருமை மாடுகளை அனுப்பி இருந்தால் கத்தியாவது நமது மக்களுக்கான திட்டங்களை கேட்டிருக்கும் எனவும் எட்டு வழி சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி என்றும் சீமானுடன் 25 ஆண்டு காலமாக பயணித்து வந்த ஒரு தமிழ் மகன் தான் என்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வில்லை என்று ஒற்றை செங்கலை எடுத்துச் சென்று பரப்பறையில் ஈடுபடும் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக பிரதமர் மோடியை சந்திக்கும் போது கேட்டிருந்தால் தெரிந்து இருக்கும் உங்களுக்கான இடி ரைட் என்னவென்று எனவும் இந்த ஒற்றை செங்கல் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுகவிற்கு நாம் கட்டப் போகும் இறுதி கட்ட முடிவு எனவும் தெரிவித்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மைக் சின்னத்தில் வாக்களித்து நமது வெற்றி வேட்பாளர் நமக்காக குரல் கொடுக்கும் ஜெகதீசன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story