நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்து பிரச்சாரம்!

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்து பிரச்சாரம்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே உள்ள ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் களம் கண்டு வருகின்றனர் இதில் குறிப்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு ராஜேஷ் என்பவர் போட்டியிடுகிறார் இவர் தற்பொழுது சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகே உள்ள ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் ஜல்லிக்கட்டு காளை அழைத்துக்கொண்டு வீடு வீடாக சென்று நாம் தமிழர் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்னை வெற்றி பெற செய்தால் புதுக்கோட்டை தஞ்சாவூர் புதிய ரயில்வே பாதையை உருவாக்குவது புதுக்கோட்டை மக்களின் நெடுநாள் கோரிக்கையான காவேரி குண்டாறு வைகை இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி புதுக்கோட்டை மக்களுக்கு 24 மணி நேரம் தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவது அதேபோல் சாலைகள் புதிதாக அமைத்து தருவது உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாக செய்வேன் என உறுதி கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் முன்னதாக ஜல்லிக்கட்டு காளையுடன் வாக்கு சேகரித்தது ஜல்லிக்கட்டு ஆழ்வர்களை மட்டுமல்லாது பொதுமக்களையும் கவர்ந்தது என குறிப்பிடத்தக்கது

Tags

Next Story