பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
தர்மபுரியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டம். CAA இதன் மூலம் மதச் சர்ப்பின்மையை சிதைக்கும், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை தீவிரப்படுத்தும் இதன் வழி அரசியல் ஆதாயம் தேடும் பாஜக அரசை கண்டித்து பிஎஸ்என்எல் அலுவலக முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாண்டியன், கருப்பண்ணன், சாக்கன் சர்மா ஆகியோர் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சந்திரகுமார் கண்டன உரையாற்றினார். இதில் அம்பேத்வளவன், விடுதலைமதி, மற்றும் கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story