நாகையில் வடையை கையில் ஏந்தி நூதன பிரச்சாரம்

நாகையில் வடையை கையில் ஏந்தி நூதன பிரச்சாரம்

நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுகவினர்

பாஜக அரசுக்கு எதிராக சுட்ட வடையை கையில் ஏந்தி நூதன பிரச்சாரம் நடைபெற்றது

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ஓன்றிய பிஜேபி அரசு கொண்டு வந்த திட்டங்கள் பொதுமக்களிடம் வந்து சேர வில்லை என கூறி துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன் தலைமையிலும் நாகை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரிபாலன் முன்னிலையிலும் நடைபெற்றது. 10 ஆண்டுகள் ஒன்றியத்தில் ஆட்சிப் புரியும் பிஜேபி அரசு தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற வில்லை என கூறி வாயில் வடை சுட்ட பிஜேபி அரசுக்கு எதிராக சுட்ட வடையை கையில் ஏந்தி நூதன முறையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் நாகை நகரமன்ற உறுப்பினரும், நகர திமுக செயலாளருமான மாரிமுத்து , தலைமை செயற்குழு உறுப்பினர் வடவூர் ரா‌ஜேந்திரன், மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில், மாவட்ட திமுக பொருளாளர் லோகநாதன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பாலு உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் பங்கேற்றனர்

Tags

Next Story