பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்

பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 

காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது. மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில், அட்சரேகை 14.7°N மற்றும் தீர்க்கரேகை 86.4°Eக்கு அருகில், பாரதீப்பிலிருந்து (ஒடிசா) தெற்கே 620 கிமீ தொலைவிலும், திகாவிலிருந்து (மேற்கு வங்காளத்தில்) 780 கிமீ தெற்கிலும், கெபுபாராவுக்கு (வங்காளதேசம்) 900 கிமீ தென்மேற்கிலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் மீன்வளத் துறையினர் மீனவர் யாரும் கடலுக்கு போக வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story