செவிலியர் பயிற்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை

செவிலியர் பயிற்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை

செவிலியர் பயிற்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை

நாகர்கோவில் பகுதியில் உள்ள மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சேர்மதுரை மகள் கீதா (19). இவர் குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி வகுப்பில் ஹெல்த் கேர் அசிஸ்டன்ட் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மருத்துவமனைக்கு சொந்தமான விடுதியில் இவர் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் விடுதியில் குளியல் அறையில் தூக்கில் பிணமாக தொங்கியதாக வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது கீதா உடல் கீழே இறக்கி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் கீதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் தங்கி இருந்த அறையையும் சோதனை மேற்கொண்டு, மாணவியின் செல்போனை போலீசார் கைப்பற்றியுள்ளனர். போலீசார் கீதாவின் தோழிகளுடன் விசாரணை நடத்தினர். தங்கிய விடுதியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டதா? அல்லது பயிற்சி பெற்ற மருத்துவமனையில் ஏதாவது சம்பவம் நடந்திருக்கிறதா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை தொடங்கியுள்ளது. அவர் செல்போனில் யார் யாரை தொடர்பு கொண்டு உள்ளார் என்பதை பற்றி விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story