ஓமலூரில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொது குழு கூட்டம்

ஓமலூரில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொது குழு கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

ஓமலூரில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொது குழு கூட்டம் நடைபெற்றது

சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் மெயின் ரோடு அருகே உள்ள ரத்ன மஹால் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் அய்யாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாதையன், சுதா தங்கமணி, கௌரி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இணை செயலாளர் வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றிய இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் நூர்ஜஹான் துவக்க உரையும், முன்னாள் மாநில துணை தலைவர் துரை, மாவட்ட துணை தலைவர் சந்திரா, மாவட்ட தலைவர் வடிவேல், மாவட்ட செயலாளர் நடராஜன், நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய தலைவர் பொன்னுவேல் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரையும் வழங்கினர்.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வரின் தேர்தலுக்கு முன் கூறிய வாக்குறுதியான சத்துணவு ஊழியர்களின் காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடம் நிரப்ப வேண்டும் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக 6750 வழங்க வேண்டும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் அபராஜித் மாநில செயலாளர்கள் குப்புசாமி பிரகலதா, மற்றும் மஞ்சுளா மாநில தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட சத்துணவு அமைப்பாளர்கள் சமையலற்கள் உதவியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story