குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு

குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு

மனு அளிக்க வந்த மக்கள் 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநெடுங்களம் ஊராட்சி தேவராயநேரி நரிக்குறவர் காலனியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பெரிய அளவில் தொழில்சாலைகள் , பள்ளிகள் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆங்காங்கே சேகரிக்கும் குப்பைகளை, இந்த பகுதி அருகே கொட்டுவதற்கு திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தேவராயநேரி பகுதி மக்கள், தங்களது பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். தொடர்ந்து தங்கள் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டால் திருச்சி- தஞ்சை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார்.

Tags

Next Story