பெண் ஊழியருக்கு ஆபாச படம்: 2ஆண்டுகளுக்கு பிறகு கைது

பெண் ஊழியருக்கு ஆபாச படம்: 2ஆண்டுகளுக்கு பிறகு கைது

கோப்பு படம் 

நாகை மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் பெண் ஊழியருக்கு ஆபாச படம் அனுப்பிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி 2ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பெண்னுக்கு அடையாளம் தெரியாத நபர் புதிய எண்ணிலிருந்து வாட்சப் மூலமாக ஆபாசமான படங்கள் ஆனுப்பியதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் நாகை சைபர் கிரைம் காவல் துறையினரால் வழக்கு பதியப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நிலையில்,

நாகை சைபர் கிரைம் காவல் துறையினரால் குற்றவாளியை அடையாளம் காணப்பட்டு எதிரியான திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த வசந்தராஜன், என்பவரை இன்று நாகை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் சிறப்பாக செயல்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் தனிப்படை காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.

Tags

Next Story