சிறுமிகளிடம் ஆபாச செய்கை - தொழிலாளி போக்சாவில் கைது

சிறுமிகளிடம் ஆபாச செய்கை - தொழிலாளி போக்சாவில் கைது

டார்வின் 

நித்திரவிளை அருகே சிறுமிகளிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்ட தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சின்னத்துறை பகுதியை சேர்ந்தவர் டார்வின் (21) கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை இவரது வீட்டருகே உள்ள வீட்டு மாடியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் 2 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மாடியின் கீழே சந்து போன்ற வழி பாதையில் நின்று கொண்டு சிறுமிகளிடம் டார்வின் ஆபாச செய்கையில் ஈடுபட்டுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் வீட்டிற்கு ஓடி சென்று பெற்றோர்களிடம் கூறி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஒரு சிறுமியின் தாயார் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி என்பவர் டார்வின் மீது போக்சோ பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் வழக்கு செய்து அவரை கைது செய்தனர்.

Tags

Next Story