சாலையை ஆக்கிரமித்து படிக்கட்டு - உணவகத்திற்கு நோட்டீஸ்.

சாலையை ஆக்கிரமித்து படிக்கட்டு - உணவகத்திற்கு நோட்டீஸ்.

பைல் படம் 

பரமத்தி வேலூர் அருகே சாலையை ஆக்கிரமைத்து படிக்கட்டு அமைத்த உணவகத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பரமத்தி வேலூர் அடுத்து உள்ள பொத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையின் குறுக்கே அனுமதி பெறாமல் இரும்பு படிக்கட்டுகள் அமைத்த சௌத் இண்டியன் ரெசிடென்சி மற்றும் ஓட்டலுக்கு பொத்தனூர் பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் யசோதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- பேரூராட்சிக்கு சொந்தமான சிமெண்ட் சாலையில் ஆக்கிரப்பு செய்து பொதுமக்கள் சென்று வர இயலாத வகையில் ஆக்கிரமிப்பு செய்து படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்படி சிமெண்ட் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனத்தில் சென்று வரவும் தடை ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

ஆகவே இக்கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் மேற்படி சாலையில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரும்பு கட்டுமானத்தை சம்பந்தப்பட்ட உரிமையாளர் உடனடியாக அகற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவுகளின் படி எவ்வித முன்னறிவிப்பின்றி மேற்படி ஆக்கிரமிப்பு டவுன் பஞ்சாயத்து மூலம் அகற்றப்பட்டு அதற்கான செலவினை தொகை தங்களிடமிருந்து வசூல் செய்யப்படும். மேலும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story