குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய நீரால் துர்நாற்றம்

குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய நீரால் துர்நாற்றம்

குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் 

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், திருமழிசை பேரூராட்சி 9வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது மேட்டுத்தாங்கல் பகுதி. இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மத்தியில் குளம் ஒன்று உள்ளது. குளத்திற்கு நீர் வரும் மற்றும் வெளியேறும் பாதை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இதனால் மழைநீர் வெளியே வழியில்லாமல் 20 குடிசை வீடுகளை சூழ்ந்துள்ளதால் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மழைநீரை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருமழிசை மேட்டுதாங்கல் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story