இந்து அறநிலையத் துறையின்  கல்லூரியில் அலுவலக ஊழியர்கள் போராட்டம்.

இந்து அறநிலையத் துறையின்  கல்லூரியில் அலுவலக ஊழியர்கள் போராட்டம்.
போராட்டம் நடத்திய கல்லூரி ஊழியர்கள் .
தற்காலிக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கீழ் குழித்துறையில் தேவி குமாரி மகளிர் கல்லூரி 1965 ம் ஆண்டு முதல் செயல் பட்டு வருகிறது . இங்கு 1400 மாணவிகளும் 100 பேராசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இங்கு 28 அலுவலக ஊழியர்கள் மற்றும் உதவியாளர், ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் உள்ளது. இதில் 24 பணியிடங்கள் கடந்த 14 ஆண்டுகளாக காலியாக உள்ளது. மேலும் 3 பேர் ஒரு ஆண்டுக்குள் ஓய்வு பெற உள்ளனர். ஆனால் 6 தற்காலிக ஊழியர்கள் குறைந்த சம்பளத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். மாணவிகளின் கழிப்பிடங்களை கழுவுவதும் இவர்களே செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது புதிய பணியிடங்களை நிரப்புவதற்காக இந்து சமய அறநிலை துறை விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பணியாற்றும் 6 ஊழியர்களை கண்டு கொள்ளவில்லை. இதனால் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் சதீஷ்குமார், ராஜேஷ், சுஜாதா, ப்ரியா, அம்பிளி, ஜெலஜா குமாரி ஆகிய 6 பேர்கள் நேற்று காலை முதல் கல்லூரியில் முதல்வர் அறை முன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டகாரர்கள் கூறினர்.

Tags

Next Story