ராசிபுரம் அருகே சாலை ஓர தடுப்பு சுவர் பணிக்கு டெண்டர் விட்ட அதிகாரிகள்

ராசிபுரம் அருகே சாலை ஓர தடுப்பு சுவர் பணிக்கு டெண்டர் விட்ட அதிகாரிகள்

தடுப்பு சுவர் பணிகள்

ராசிபுரம் அருகே நடைபெற்ற முடிந்த சாலை ஓர தடுப்பு சுவர் பணிக்கு அதிகாரிகள் டெண்டர் விட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 85.R. குமாரபாளையம் ஊராட்சியில் 10 லட்சம் மதிப்பீட்டில் ஏளுர் டூ கல்யாணி செல்லும் பாதையில் சாலையோர தடுப்புச் சுவர் அமைக்கும் பணிவானது கடந்த சில நாட்களாக டெண்டர் விடாமல் பணியானது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23.01.2024 அன்று 90 சதவீத பணிகள் முடிவு பெற்ற பிறகே வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் பணிக்கான டெண்டர் விடப்பட்டதாக கூறப்படுகிறது.தற்போது முடிவு பெற்ற பணிக்கு டெண்டர் விட்ட அரசு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக ராசிபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் வேம்புசேகரன்,

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, அவர்களிடம் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்திருந்தனர். பணி முடிவு பெற்ற பிறகு டெண்டர் விட்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story