பாளையம் புதூரில் முதல்வர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

பாளையம் புதூரில் முதல்வர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு

பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதல்வர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் முதல்வரின் முகவரி அலுவலர் ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 11.07.2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்டம் துவக்கி வைக்க உள்ளதை முன்னிட்டு, முதல்வரின் முகவரி துறை சிறப்பு அலுவலர் த.மோகன்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப.,

ஆகியோர் இன்று (05.07.2024) தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தனித்துணை ஆட்சியர் தனப்பிரியா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story