வைகையில் செல்லும் தண்ணீரை கணக்கெடுத்த அதிகாரிகள்

வைகையில் செல்லும் தண்ணீரை கணக்கெடுத்த அதிகாரிகள்

தண்ணீர் அளவு கணக்கெடுப்பு 

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட விவசாய தேவைக்காக சுமார் 6000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் மானாமதுரை வந்தடைந்த நீரை வைகை ஆற்று மேம்பால பகுதியில் இருந்து பொதுப்பணி துறையின் கீழ் இயங்கும் நீர்வளத்துறை அதிகாரிகள் நவீன இயந்திரங்களை கொண்டு வைகை ஆற்றில் செல்லும் தண்ணீரின் அளவை கணக்கெடுத்தனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், வைகை ஆற்றில் இருந்து விவசாய தேவைக்காக தண்ணீர் திறந்து விடும் போது வழக்கமாக தண்ணீரை கணக்கிடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதேபோல நவீன இயந்திரங்களைக் கொண்டு வைகை ஆற்றில் தண்ணீர் செல்லும் அளவை கணக்கிட்டு சரி பார்த்தோம் என்றனர்.

Tags

Next Story