கீழக்கரை மீன் மார்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

கீழக்கரை மீன் மார்கெட்டில்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

அதிகாரிகள் ஆய்வு 

கீழக்கரை மீன் மார்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வியாபாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டினை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு. ஜி.விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து கடைகளையும் சுத்தம் குறித்தும் , மீன்களில் வேதிப்பொருட்கள் கலப்படம் குறித்தும் , கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் , மீன்வளத்துறை சார்பு ஆய்வாளர் பாண்டியராஜ் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனார். அதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் பெறப்பட்ட உரிமைத்தினை அனைத்து கடைகளிலும் முன்பாக பார்வையில் படும்படி தொங்கவிடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது .மேலும் மீன்களை சேகரித்து வைக்கும் இடத்தில் போதுமான அளவு வெளிச்சம் இல்லை என்றும் அதனை சரி செய்யுமாறும் அறிவுறுத்தினர்.

Tags

Next Story