இளையான்குடியில் போலியாக கையெழுத்திடும் அதிகாரிகள்

இளையான்குடியில் போலியாக கையெழுத்திடும் அதிகாரிகள்

சமூக ஆர்வலர்

இளையான்குடியில் போலியாக கையெழுத்திடும் அதிகாரிகள் என சமூக ஆர்வலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் சமூகஆர்வலர் ராதாகிருஷ்ணன். இவர் சிவகங்கை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் உள்ள நீர்நிலைகள் குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தார்.

ஆனால் சிவகங்கை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் முறையான தகவல்களை கொடுக்கவில்லை. இதையடுத்து ராதாகிருஷ்ணன் தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். ராதாகிருஷ்ணன் கேட்ட தகவல்களை உடனடியாக கொடுக்குமாறு தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சில பேரூராட்சிகளில் இருந்து மட்டும் ராதாகிருஷ்ணனுக்கு தகவல் அனுப்பப்பட்டன. இளையான்குடி பேரூராட்சியில் இருந்து தகவல்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால் இளையான்குடி பேரூராட்சியில் இருந்து தகவல் கொடுத்துவிட்டதாகவும்,

அதை ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டு பெற்று கொண்டதாகவும் தகவல் ஆணையத்துக்கு பேரூராட்சி அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். இதையடுத்து அந்த கடிதத்தை தகவல் ஆணையம் ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பியது.

ஆனால் அதில் அவரது கையெழுத்து போலியாக இருந்தது. தனது கையெழுத்தை போலியாக இட்டது குறித்து இளையான்குடி போலீஸாரிடம் ராதாகிஷ்ணன் புகார் கொடுத்துள்ளார்.

Tags

Next Story