நீரின்றி வறண்டு பாறைகளாக காணப்படும் ஒகேனக்கல் காவிரி ஆறு !

நீரின்றி வறண்டு பாறைகளாக காணப்படும் ஒகேனக்கல் காவிரி ஆறு !

ஒகேனக்கல் காவிரி ஆறு


ஒகேனக்கலில் நீரின்றி வறண்டு பாறைகளாக காணப்படும் காவிரி ஆறு இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து சரிந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணா ராஜசேகர் அணைகளில் நீர் திறந்து விடப்படவில்லை மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை பொழியாததை அடுத்து நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் சினி ஃபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர்வரத்து இல்லாமல் வறண்டு பாறைகளாக காட்சியளிக்கிறது. மேலும் நீர்வரத்து இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் வரத்தும் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story