பழைய இரும்பு கடை தீ விபத்து

விருதுநகரில் உள்ள பழைய இரும்பு கடையில் நடந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் - புல்லலக்கோட்டை சாலையில் சேக்கிழார் தெருவைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு சொந்தமாக பழைய இரும்பு கடை இயங்கிவருகிறது.

மேலும் இவர் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் நிலையில் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை அவரது கடை அருகில் உள்ள குடோனில் அதிகளவில் இருந்ததாகவும். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு தங்கராஜ் வீட்டிற்கு சென்ற நிலையல் நள்ளிரவில் அவரது குடோனில் தீப்பற்றி எரிந்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் தங்கராஜ் என்பவருக்கு தகவல் கொடுத்து விட்டு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் பாலமுருகன் தலைமையில் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.

Tags

Next Story