எலச்சூரில் மூதாட்டி மீது கார் மோதி பலி

எலச்சூரில் மூதாட்டி மீது கார் மோதி பலி

விபத்தை ஏற்படுத்திய கார்

எலச்சூர் பகுதியில் சாலைய கடக்க முயன்ற மூதாட்டி மீது கார் மோதி விபத்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அருகே உள்ள எலச்சூர் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ராஜம்மாள் என்ற மூதாட்டி சாலையை கடக்கும் பொழுது திருப்பத்தூர் பகுதியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி வந்த கார் மூதாட்டி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மூதாட்டியின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் சம்பவப் பகுதிக்கு விரைந்து வந்த ஊத்தங்கரை காவல்துறையினர் சம்பவப் பகுதியில் இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சம்பவப் பகுதியில் மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் விபத்து குறித்து காவல் ஆய்வாளர் கந்தவேல் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் சாலையைக் கடக்கும் முற்பட்ட மூதாட்டி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story