கார் விபத்தில் மூதாட்டி பலி

கார் விபத்தில் மூதாட்டி பலி
மூதாட்டி பலி
ராஜநாயக்கன்பட்டி சுங்கச்சாவடி அருகே தடுப்பு கட்டையில் கார் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை திருநகர் சண்முகம் தெருவை சேர்ந்தவர் தினேஷ்(40). இவரது தாயார் காஞ்சனா(60). இருவரும் நேற்று முன்தினம் மாலை காரில் திருச்சியில் இருந்து மதுரைக்கு சென்றுக்கொண்டிருந்தனர். ராஜநாயக்கன்பட்டி சுங்கச்சாவடி அருகே தடுப்பு கட்டையில் எதிர்பாரத விதமாக கார் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த தினேஷ், காஞ்சனா இருவரும் விராலிமலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் காஞ்சனாவை பரிசோதித்தபோது அவர் ஏற்க னவே இறந்துவிட்டது தெரியவந்தது. தினேஷ் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ளார். விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story