கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி - காப்பாற்றிய போலீசார்

கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி - காப்பாற்றிய போலீசார்

மீட்கப்பட்ட மூதாட்டி 

மரக்காணம் அருகே கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் இடையன்குளம் பகுதியை சேர்ந்தவர் சத்யநாதன் என்பவரது மனைவி மாலதி வயது 70, இவர் இன்று மாலை மரக்காணம் அடுத்த தீர்த்தவாரி கடற்கரை பகுதியில் வெகு நேரமாக சோகத்துடன் அமர்ந்து கொண்டிருந்தார் திடீரென கடற்கரைக்குள் சென்று கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர் சக்தி கணேசன், தலைமை காவலர் புருஷோத்தமன் ஆகியோர் அந்த மூதாட்டியை மீட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மரக்காணம் போலீசார் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story