கெங்ககவல்லியில் முன்னாள் முதல்வர்வரிடம் முதியவர் முறையீடு

கெங்ககவல்லியில் முன்னாள் முதல்வர்வரிடம் முதியவர் முறையீடு
நலத்திட்ட உதவிகள் வழங்கல் 
கெங்ககவல்லியில் முன்னாள் முதல்வர்வரிடம் முதியவர் முறையிட்டார்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி. கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி செந்தாரப்பட்டி பேரூராட்சிக்கு வருகை தந்த பொழுது மூதாட்டி ஒருவர் எடப்பாடியார் அவர்களிடம் முதியோர் கடந்த இரண்டு மாதமாக உதவித்தொகை வரவில்லை என்று கோரிக்கை வைத்தார்.

அப்போது மூதாட்டியின் வாக்கர் ஸ்டிக் பழுதடைந்து இருந்ததால் தடுமாறினார். அப்பொழுது அவரைத் தாங்கிப் பிடித்த எடப்பாடியார் நிகழ்ச்சிக்குப் பின்பு சேலம் புறநகர் மாவட்டக் கழக செயலாளர் ஆர் இளங்கோவன் மூலமாக ஒரு வாக்கர் வாங்கி கொடுத்து, முதியோர் உதவி தொகை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார்கள்.

அதன் பேரில் கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு அ.நல்லதம்பி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேசி முதியோர் உதவி தொகை காண ஏற்பாடுகளை செய்து கொடுத்து வாக்கர் ஸ்டிக் வாங்கி கொடுத்தார். இதில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் துரை.ரமேஷ் கூடமலை வி.ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story