கஞ்சா விற்ற முதியவர் கைது

கஞ்சா விற்ற முதியவர் கைது

கஞ்சா விற்ற முதியவர் கைது

ராம்ஜி நகர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முதியவரை திருவரம்பூர் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் அருகே கஞ்சா விற்பதாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி காவல் உதவி ஆணையர் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராம்ஜி நகர் மில் காலனி சேர்ந்த மதன்குமார் வயது 66 சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவரை பிடித்த போலீசார் அவரிடம் இருந்த ரூபாய் 1500 மதிப்புள்ள 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றியதோடு மதன்குமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story