சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் கைது

கைது செய்யப்பட்ட சிவராமன் 

மயிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த தென்ஆலப்பாக்கம் கிராம மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 88). இவர் மயிலம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி, அந்த சிறுமி தனது தாயிடம் கூறி அழுதாள். இதையடுத்து சிறுமியின் தாய் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவராமனை கைது செய்தார்.

Tags

Next Story