முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

தற்கொலை 

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் பகுதியில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம்,மாத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாத்தூர் அண்ணா நகர் ஆறாம் வீதியில் வசிக்கும் குமாரவேல் வயது 54 இவர் தனது வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர்.தற்கொலை செய்து கொண்டவரின் மனைவி கலைச்செல்வி கொடுத்த புகாரில் மாத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் விசாரணை செய்து வருகிறார்.

Tags

Next Story