சிவகாசியில் முதியவர் தற்கொலை

சிவகாசியில் முதியவர்  தற்கொலை
சிவகாசியில் சுடுகாட்டில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை...
சிவகாசியில் சுடுகாட்டில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புதுக்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் கூடாண்டி ஆசாரி (84).இவரது மனைவி குருவம்மாள் இறந்துவிட்டதை தொடர்ந்து குடந்தை ஆசாரி தனியாக வசித்து வந்துள்ளார்.கூடாண்டி ஆசாரி சம்பவத்தன்று புதுக்கோட்டை சுடுகாட்டில் இருக்கும் ஆலமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் எம்.புதுப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.அதன் பேரில் போலீசார் கூடாண்டி ஆசாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து,வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story