லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி பலி 

சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு கிராமத்தில் லாரி மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் வேம்புகண்ணு (வயது 84), கூலித்தொழிலாளி. இவர் சாலையில் நின்று கொண்டிருந்த போது சேத்துப்பட்டு நோக்கி வந்த லாரி அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த வேம்பு கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story