தனியார் பேருந்து மோதி முதியவர் பலி

X
விபத்தில் முதியவர் பலி
திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்கமுயன்ற முதியவர் பேருந்து மோதி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி ஜீயபுரத்தை அடுத்த முக்கொம்பு திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது கரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் மனிதர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் விஜயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
