கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

விபத்து 

புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துப்பட்டியில் முதியவர் கார் மோதி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமயம் அருகே உள்ள மலையலிங்கபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(79). விவசாயி. நச்சாந்துபட்டி சாலையில் நடந்து வந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் மாரியப்பன் அதே இடத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவர் சின்னக் கருப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story