இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
முதியவர் பலி 
திருவள்ளூர் மாவட்டம், பாட்டை மேடு பகுதியில் இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பாட்டைமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (54). இவா் புதன்கிழமை இரவு கிராமத்திலிருந்து பெரியபாளையம் செல்வதற்காக வடமதுரை மின்வாரிய அலுவலகம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தாராம். அப்போது, பின்னால் வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் முருகேசன் பலத்த காயம் அடைந்தாா்.

இதையடுத்து, பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் முருகேசன் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து அவரது மகன் மணிகண்டன் பெரியபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags

Next Story